OUM மலேசியாவுடன் இணைந்து சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் 9வது பட்டமளிப்பு விழாவை நடத்தியது.

சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் சார்பில் 9வது பட்டமளிப்பு விழா 2025 சென்னை, ஹோட்டல் ராதா ரீஜென்ட்  வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 சென்னை, ஹைதராபாத், விஜயவாடா மற்றும் பெங்களூரு வளாகங்களில் இருந்து வந்த சுமார் 400 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

இந்த விழாவிற்கு  மலேசியாவின்(OUM) மற்றும் ஃபியூச்சர் ட்ரீம் அகாடமி,மலேசியா சார்பில் பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

YBhg Prof.Dr.அகமத் இசானி அவாங், தலைவர் மற்றும் துணைவேந்தர், OUM மலேசியா – முக்கிய உரையாற்றி பட்டங்களை வழங்கினார்.

Prof. Dr யோன் ரொஸ்லி டாவுத், துணைவேந்தர் (வணிக மேம்பாடு), OUM மலேசியா, Mr. பானி சைனல் அஸ்மியான், தலைமை செயல் அதிகாரி, MLSB-OUM, மலேசியா, திரு. கே. கலையரசன், தலைவர், ஃபியூச்சர் ட்ரீம் அகாடமி, மலேசியா, திரு. ஜை நானக் சிங், தலைமை செயல் அதிகாரி, ஃபியூச்சர் ட்ரீம் அகாடமி, மலேசியா.

பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கிய  சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமத்தின்  தலைவர் திரு R பூமிநாதன் அவர்கள் பட்டமேற்கும் மாணவர்களை வாழ்த்தி பேசினார் .  மேலும் அவர் பேசுகையில் கல்வி மட்டும் அல்லாது வேலை வாய்ப்பு தொடர்பான திறன்களை மாணவர்களுக்கு அளித்து வருவதாக  தெரிவித்தார் .

மேலும், OUM மலேசியாவுடன் நீண்டகால இணைப்பு சென்னைஸ் அமிர்தா மாணவர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் மற்றும் வாய்ப்புகளை தொடர்ந்து அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் :

கல்லூரி தொடங்கிய நாள்முதல் சென்னைஸ் அமிர்தா கல்வித்துறையில், குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் தொடர்புடைய துறைகளில் முன்னோடியாய் திகழ்கிறது.

 இதுவரை 27,000 மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் மூலம் தரமான கல்வி மற்றும் உலகளாவிய வேலை வாய்ப்புகளுக்கான மையமாக சென்னைஸ் அமிர்தா தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

இந்த 9வது பட்டமளிப்பு விழாவின் மூலம் சென்னைஸ் அமிர்தா தொழில் சார்ந்த தரமான கல்வி மற்றும் 100% சதவிகித வேலை வாய்ப்பு என்கின்ற தனது மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது .

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading