

இந்த திரைப்படம் குடும்ப பந்தங்கள், நெஞ்சை நெருக்கும் உணர்வுகள், நியாயம் மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை ஆழமாக ஆராயும் ஒரு உணர்ச்சி பூர்வமான நாடகமாக திகழ்கிறது. கதை மையத்தில், தந்தையை ஒரு எதிர்பாராத பிரச்சினையிலிருந்து காப்பாற்றுவதற்காக எதையும் தியாகம் செய்யத் தயங்காத ஒரு மகளின் வாழ்க்கை தான். ஆனால் அவளின் நல்ல நோக்கம், தன்னைப் போலி வாக்குறுதிகள் மற்றும் சுயநல நோக்கங்களுடன் நிறைந்த ஒரு சிக்கலான உலகிற்குள் இழுத்துச் செல்கிறது. நம்பிக்கை எப்படி தவறாகப் பயன்படுத்தப்படலாம், அதிகாரம் தவறான கைகளில் சென்றால் வாழ்க்கை எப்படி சிதறி போகும் என்பதையும் படம் தைரியமாக வெளிப்படுத்துகிறது.
சோனியா அகர்வால் ஒரு கருணை மிக்க நீதிபதியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீதிமன்ற காட்சிகளில் அதிகாரத்தையும், மனிதாபிமானத்தையும் சமநிலைப்படுத்தியுள்ளார். விக்ராந்த், உண்மைக்காக போராடும் தீவிரமான காவல்துறையினராக சிறப்பாக நடித்துள்ளார். போலி அடையாளங்களும் ஊழல்களும் நிறைந்த வழக்கை விசாரிக்கும் அவரது நடிப்பு, படத்தின் பரபரப்பை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாக அமைந்துள்ளது. டி. எஸ். பிரசன்னாவின் ஒளிப்பதிவு, கோத்தகிரி மலையிலான அமைதியான இயற்கை அழகையும், கதையின் உணர்ச்சி நிறைந்த நெருக்கடியையும் அழகாக இணைக்கிறது. வைகுண்தின் பின்னணிச் இசை, முக்கியமான தருணங்களில் உணர்வுகளை உயர்த்துகிறது. குறிப்பாக, நீதிமன்றத்தில் நடக்கும் உச்சக்கட்ட காட்சிகள் படத்தின் உணர்ச்சிப் பீக்கை வெளிப்படுத்துகின்றன.
