

சென்னை, ஏப்.26-
ஸ்ரீ அகர்வால் சபா தனது 75-வது ஆண்டைக் குறிக்கும் பவள விழாவை மிகவும் பெருமையுடன் கொண்டாடியது. இந்த விழா இன்று சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.
கடந்த 75 ஆண்டுகளாக சபா மேற்கொண்டு வரும் சமூக சேவை, கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் வலுவான சமூக பிணைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு இந்த விழா சான்றாக அமைந்திருந்தது. இந்த சபா தொடங்கப்பட்டதில் இருந்து, பல நலத்திட்டங்களின் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதிலும், அதன் உறுப்பினர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
பவள விழாத் தலைவர் விஜய் குமார் கோயல் பேசுகையில், இந்தக் கொண்டாட்டம் என்பது வெறும் நிகழ்ச்சி அல்ல, இது ஒற்றுமை, சேவை, பாரம்பரியம் மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கும் ஒரு துடிப்பான விழாவாகும் என்றார். சபா கடந்த வந்த பாதையை நினைவுகூர்ந்த அவர், சமூக முன்னேற்றம் மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதில் அதன் தொடர்ச்சியான முயற்சிகளை விளக்கிக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “அனைத்து தரப்பு மக்களையும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைப்பதும், இளைய தலைமுறையினரை அவர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் இணைந்திருக்க ஊக்குவிப்பதும், பரஸ்பர மரியாதை, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளை மேலும் வலுப்படுத்துவதுமே இந்த பவள விழா கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிட்டார்.
“ஸ்ரீ அகர்வால் சபாவின் இந்த பவள விழா தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.”
பெங்களூரைச் சேர்ந்த “மிராக்கிள் ஆன் வீல்ஸ்” குழுவினரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இந்தத் தொடக்க விழா மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. மேலும், சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களையும் சமூக உறுப்பினர்களையும் கவுரவிக்கும் சிறப்பு பாராட்டு விழாவும் இதில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது, தலைவர் சீதாராம் கோயல், பொதுச் செயலாளர் பால் கோவிந்த் குப்தா, விழாத் தலைவர் அருண் குமார் சுல்தானியா, ஸ்ரீ அகர்வால் மகளிர் சமிதியின் தலைவர் சுனிதா கெம்கா, அகர்வால் மகளிர் மண்டலின் தலைவர் ஊர்மிளா சரப், ஜூனியர் அகர்வால் மகளிர் மண்டலின் தலைவர் பூஜா அகர்வால், ஸ்ரீ அகர்வால் இளைஞர் சங்கத்தின் தலைவர் சௌரப் கெம்கா மற்றும் சென்னையில் உள்ள ஸ்ரீ அகர்வால் சபா குழுவினரின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
