ட்ரோன் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் கருடா ஏரோஸ்பேஸ் -ன், புதிய பாதுகாப்பு ட்ரோன் வசதியை மாண்புமிகு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு.சஞ்சய் சேத்தி தொடங்கி வைத்து, வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவியருக்கு இலவச ட்ரோன் பயிற்சி திட்டங்களையும் அறிவித்தார்.*

A group of officials at Agni Technology College in Chennai, showcasing a new security drone during its launch event, with central minister Shri Sanjay Shetthi in attendance.
A group of five individuals, including a central minister, standing beside a glass display containing a drone model at the inauguration of a security drone facility at Agni Technology College in Chennai.

சென்னை தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்பக் கல்லூரியில், கருடா ஏரோஸ்பேஸின் புதிய பாதுகாப்பு ட்ரோன் வசதியை மத்திய இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத்தி தொடங்கி வைத்தார்.  கருடா ஏரோஸ்பேஸ் தனது அக்ரி ட்ரோன் வசதியை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி சாதனை படைத்தது. அதன் மற்றொரு மைல்கல் சாதனை இந்த பாதுகாப்பு ட்ரோன் வசதி என்பது குறிப்பிடத்தக்கது.  உள்நாட்டு ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கும், ‘தற்சார்பு இந்தியா’ என்ற நாட்டின் உயரிய பயணத்தை இயக்குவதற்கும் கருடா ஏரோஸ்பேஸின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இந்த மைல்கல் நிகழ்வு எடுத்துக் காட்டியது 

இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் சஞ்சய் சேத்தி,  பாதுகாப்பு ட்ரோன் வசதியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து, ஐந்து மேம்பட்ட யுஏவி அமைப்புகளை வெளியிட்டார்.  பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட உயரமான பகுதிகளில் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கான ஆவலேன்ஞ் விக்டிம் ட்ரோன்(Avalanche Victim Drone),  ஒருங்கிணைந்த தாக்குதல் மற்றும் கண்காணிப்பு திறன்களை செயல்படுத்தும் ஸ்வார்ம் ட்ரோன்(Swarm Drone), ராணுவ வீரர்களுக்கு முன்வரிசையில் ஆதரவு மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஜவான் ட்ரோன்(Jawan Drone), விரைவான  போர்க்கள ஆயுத உதவி வழங்கும் கேனிஸ்டர் டிராபிங் ட்ரோன் (Canister Dropping Drone)  மற்றும் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாடுகளுக்கான மேம்படுத்தப்பட்ட, பல்நோக்கு UAV ட்ரோனி 2.0-( Droni 2.0) என நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொன்றும் முக்கியமான பாதுகாப்பு மற்றும் பேரழிவு தடுப்பு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கருடா ஏரோஸ்பேஸின் பயணம், முக்கிய மைல்கற்கள் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் ட்ரோன் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சிக்கான பங்களிப்புகளை உள்ளடக்கிய  ’கருடா ரக்ஷா உடான் 2025’ எனும் புத்தகத்தையும் அமைச்சர் சஞ்சய் சேத்தி வெளியிட்டார். மேலும் கருடா ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலியலை மேலும் வலுப்படுத்தி, 13 ஜே.ஏ.கே ரைஃபிள்ஸ் (லடாக் மற்றும் குவாலியர்) உடன் இணைந்து ஒரு பாதுகாப்பு ட்ரோன் ஆய்வகத்தை நிறுவுவதாகவும் அறிவித்தது.  இந்த நிறுவனம் இந்திய பாதுகாப்பு பணியாளர்களுக்கான இலவச ரிமோட் பைலட் சான்றிதழ் (ஆர். பி. சி) திட்டத்தையும் அறிமுகப்படுத்தியதோடு, இந்த நிகழ்வின் போது, முதல் பாட்ஜ் வீரர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் நாடு முழுவதும் பாதுகாப்பு கட்டளைகள் மற்றும் அலகுகளை பராமரிக்க கருடா ஆகாஷ் ரக்ஷா வேன்கள் (GAR vans) மொபைல் ட்ரோன் வரிசைப்படுத்தல், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு மையங்கள் வடிவமைக்கப்பட்டு அவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதேபோல,  வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கு இலவச ட்ரோன் பயிற்சி திட்டங்களும் இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.  இவையாவும்,  கருடா ஏரோஸ்பேஸின் சமூக தாக்கத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு சமூகத்திற்கான ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading