“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

இசையமைப்பாளர் எஸ். தமன்பேசியதாவது..,
 
“சில வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கிடைக்கும். ‘இதயம் முரளி’ அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு.
 
மனோஜ் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பேசுவார் என்று நான் நினைத்ததே இல்லை. ‘ஈரம்’ படத்தில் இருந்து எங்களுடைய பயணம் தொடங்கியது. அந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட்டைஷங்கர் சாரிடம் காட்டியபோது, ‘தண்ணீரே வில்லன்’ என்ற கதையை பலரும் நம்பவில்லை. ஆனால் அந்த உலகத்தை நம்ப வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தியவர் மனோஜ். அந்தப் பயணம்தான் இன்று ‘இதயம் முரளி’ வரை எங்களை கொண்டு வந்திருக்கிறது. அதற்காக மனோஜுக்கு என் மனமார்ந்த நன்றி.
 
இந்தப் படத்தின் கதை என்னிடம் வந்தது ஒரு சிறிய டிரெய்லர்மூலம்தான். என் நண்பர் தீபன், இயக்குநர் ஆகாஷ் உருவாக்கிய அந்த கான்செப்ட் டிரெய்லரை அனுப்பி வைத்தார். CGI, 2D காட்சிகள் என மிக அழகாக உருவாக்கப்பட்டிருந்த அந்த டிரெய்லரை பார்த்தவுடன், இந்தப் படத்திற்கு நான் கண்டிப்பாகஇசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் வேறு ஒரு இசையமைப்பாளரைப் பற்றி யோசிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கதையின் மீது இருந்த ஈர்ப்பால் நானே ஆகாஷிடம், ‘நான் இசையமைத்தால் இந்தப்படத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’ என்று சொன்னேன். இவ்வளவு அழகான காதல் கதையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த முடிவுக்குப்பிறகு உருவான முதல் பாடல் ‘தங்கமே’. அங்கிருந்துதான் இந்த இசைப் பயணம் தொடங்கியது. அதன் பிறகு முழு ஆல்பமும் மிக அழகாக உருவானது.  
 
உண்மையைச் சொன்னால், நான் நடிகராக நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. மனோஜ் வற்புறுத்தவில்லை என்றால் நிச்சயமாக நடித்திருக்க மாட்டேன். நான் எப்போதும் செட்டுக்குஇசையமைப்பாளராகத்தான் வருவேன்; நடிகராக வர வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் ஆகாஷ் என்னை சம்மதிக்க வைத்தார். இந்தப் படத்தில் ப்ரீத்தி, கயாது, நிஹாரிகா, ஏஞ்சல்உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. அவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்தார்கள்.
 
நட்டி சாருடன் மீண்டும் இணைந்ததும் மகிழ்ச்சி அளித்தது. அவருடன் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் இருந்ததால், இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில், ரக்ஷன் மற்றும் டிராவிட்(நகைச்சுவையாக) எங்களுக்கு நிறைய ‘டார்ச்சர்’ கொடுத்தார்கள். குறிப்பாக டப்பிங் செய்யும்போது தேவைக்கு அதிகமாகப் பேசி, படத்தின் இறுதிப்பணிகளையேதாமதப்படுத்திவிட்டார்கள். ஆனால் அதுவும் செட்டில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளில் ஒன்றுதான்.
 
அதர்வா மிகவும் அருமையான மனிதர். அவருடன் பணியாற்றியதுமிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எப்போதும் நேர்மறை ஆற்றலுடனும், மகிழ்ச்சியுடனும் அனைவரையும்உற்சாகப்படுத்தும் மனிதர் அவர்.” இந்தப் படத்தின் முழுக்குழுவுடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாகஇருந்தது. ஒவ்வொருவரும் இந்தப் படத்தை தங்களுடைய படமாக நினைத்து உழைத்தார்கள். அந்த அர்ப்பணிப்புதான்இன்று இந்த வெற்றியாக மாறியுள்ளது.
 
இந்தப் படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும்ரசிகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு இசையமைப்பாளராக இதைவிட பெரிய திருப்தி வேறு எதுவும் இல்லை. இந்த வெற்றிக்கு காரணமான இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், தயாரிப்பாளர் குழு, நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் இந்தப் படத்தை கொண்டாடிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
 
‘இதயம் முரளி’ எங்கள் அனைவரின் அன்பாலும், நம்பிக்கையாலும் உருவான திரைப்படம். அந்த அன்பை இதேபோல் தொடர்ந்து கொடுத்து, நல்ல சினிமாவை ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”
 
நடிகர் மதன் பேசியதாவது..,
 
“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தப் படத்தின்தலைப்பே இதில் நடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசையை எனக்குள் ஏற்படுத்தியது. ஏனெனில் முரளி சார் நடித்த ‘இதயம்’ திரைப்படம் இன்றும் அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிளாசிக் படம். குறிப்பாக 80-களில்வளர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்தமானது. அந்த உணர்வை நினைவூட்டும் தலைப்பைக்கொண்ட இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
 
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமானஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் ஒளிப்பதிவாள…
(3/4)

நடிகர் சுதாகர் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். முதலில், ‘இதயம் முரளி’ போன்ற அருமையான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. நான் காமெடி கதாபாத்திரங்களை மட்டுமா செய்ய வேண்டும், இல்லையா வேறு விதமான கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது. அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறேன் என்ற மகிழ்ச்சி இருக்கிறது.

நான் இயல்பாகவே மிகவும் அமைதியானவன். அதிகம் பேச மாட்டேன். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் என்னை மிகவும் இயல்பாக பழக வைத்து, ஒரு நண்பர்கள் குழுவின் அங்கமாக உணர வைத்தார்கள். அதற்காக முழு படக்குழுவிற்கும் என் நன்றி.

கயாது, ப்ரீத்தி, சாய், ஜோஜோ, மனோஜ் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ஒரு காமெடி காட்சியை எழுதுவது ஒரு விஷயம்; அதை சரியாக படமாக்கி, எடிட்டிங் மூலம் இன்னும் சிறப்பாக மாற்றுவது இன்னொரு விஷயம். மனோஜ் சார், எடிட்டர் பிரதீப் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அதனை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். என் காட்சிகள் எதுவும் கட் ஆகாமல் பார்த்துக்கொண்ட இயக்குநருக்கு நன்றி.

குறிப்பாக டிராவிட் பற்றி சொல்ல வேண்டும். அவன் மிகவும் உணர்ச்சியோடு பேசினான். நாங்களும் அதே அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம். நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருந்தோம். இந்த ஆண்டு ‘டியூட்’ மற்றும் ‘இதயம் முரளி’ ஆகிய படங்கள் எங்களுக்கு அந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளன. இந்தப் படத்தில் எனது நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக வர டிராவிட் எழுதிய வசனங்களும், எங்கள் இருவரின் கலந்துரையாடல்களும் பெரிய காரணம்.

சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும்போதுதான் எனக்கு முழுமையான திருப்தி கிடைக்கிறது. சீரியஸான காட்சிகளுக்கு முந்தைய நாள் கூட எனக்கு தூக்கம் வராது. ஆனால் காமெடி காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பேன்.

நன்றி சொல்ல வேண்டிய பலரின் பெயர்களை தவறவிட்டிருக்கலாம். ரக்ஷன், ஏஞ்சலின், மாதம்பட்டி ரங்கராஜ், நட்டி சார், ரமணகிரிவாசன் சார், சின்னி ஜெயந்த் சார் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சின்னி ஜெயந்த் சார் பல வருடங்களுக்கு முன்பே, ‘நீங்கள் சினிமாவுக்கு வந்தால் இன்னும் பெரிய இடத்தை அடைவீர்கள்’ என்று என்னை ஊக்கப்படுத்தியவர். இன்று அது நினைவுக்கு வருகிறது.

ரமணகிரிவாசன் சாருடன் நடந்த கதை விவாதங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. சில நாட்கள் விவாதங்களில் மட்டும் இருந்தால்கூட நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.

இந்தப் படத்தில் வேலை செய்த அனுபவம், ஒரு படத்தில் நடித்த அனுபவமாக இல்லாமல், ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படம் முடிந்துவிட்டதே என்ற வருத்தம் இருக்கிறது. ஆகாஷ் பாஸ்கரன் விரைவில் அடுத்த படத்தை தொடங்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றி.”

நடிகை கயாது லோகர் பேசியதாவது..,

‘இதயம் முரளி’ தான் நான் முதலில் ஒப்பந்தமான தமிழ் திரைப்படம். அதனால் இந்தப் படம் எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கும் எனக்கும் நீங்கள் அளித்த அன்பு மிகவும் நெகிழ்ச்சியாகவும், மனதை வருடும் வகையிலும் இருக்கிறது.

‘அமுதா’ கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமானது. அந்தக் கதாபாத்திரத்தின் அப்பாவித்தனம், மன வலிமை, உணர்வுகள் என அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை நம்பி என்னிடம் ஒப்படைத்த இயக்குநருக்கும், முழு படக்குழுவிற்கும் என் நன்றி. ஆகாஷ் இந்தக் கதையை என்னிடம் முதலில் பகிர்ந்தபோது, ‘சாம்’ கதாபாத்திரத்தை நான் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார். அதேபோல், ப்ரீத்தியும் ‘அமுதா’ கதாபாத்திரத்திற்கான லுக் டெஸ்ட் செய்திருந்தார். இறுதியில் எல்லாம் சரியாக அமைந்து, ‘அமுதா’ எனக்கு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் என்னுள் இருக்கும் நடிகையை பலரும் பார்த்து பாராட்டியது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் சார் எங்களை திரையில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். சாய் மற்றும் முழு ஒளிப்பதிவுக் குழுவிற்கும் என் நன்றி. இந்தப் படத்தின் காட்சியமைப்பும், இசையும், தொழில்நுட்ப தரமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

தமன் சாரின் இசை இந்தப் படத்தை இன்னும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. முழு ஆல்பத்தையும் நான் மிகவும் விரும்புகிறேன். அது 2000-களின் இனிமையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. எனக்கு அவர் பரிசாக வழங்கிய பியானோவிற்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தில் இணைந்து நடித்த அதர்வா, ப்ரீத்தி, டிராவிட், ஏஞ்சலின், ரக்ஷன், நட்டி சார், மோனிஷா, யஷஸ்ரீ மற்றும் அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறேன். ப்ரீத்தி எனக்கு இந்தத் துறையில் மிகவும் நெருக்கமான தோழி. எப்போதும் நான் சாய்ந்து நிற்கக்கூடிய ஒருவராக இருந்ததற்கு நன்றி. நீ இந்தப் படத்தில் மிகவும் அழகாக இருந்தாய்.

அதர்வாவுடன் திரையில் அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும், நாங்கள் உருவாக்க முயன்ற உணர்வுகள் ரசிகர்களிடம் சென்றடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் தொழில்மீதான அர்ப்பணிப்பே திரையில் பிரதிபலித்திருக்கிறது. மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நாங்கள் உண்மையான உணர்வுகளோடும், முழு அர்ப்பணிப்போடும் பணியாற்றினோம். அதைத்தான் ரசிகர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்தப் படத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கிறது. ஏற்கனவே படம் பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை திரையரங்கில் சென்று பாருங்கள்.

இந்த வெற்றிக்காக உழைத்த ஒளிப்பதிவுக் குழு, உதவி இயக்குநர்கள், லைட்மேன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்த வெற்றியை நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவோம். மீண்டும் ஒருமுறை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.”

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தின் பயணம் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நாள் ஒன்றாக உழைத்த இந்தப் பயணத்தை இப்போது ஒரு மேடையில் நின்று நினைவுகூர்ந்து, அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

முதலில், என்னுடைய மிகப்பெரிய நன்றி இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குத்தான். என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி. கதை கேட்ட முதல் நொடியிலேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘சாம்’ கதாபாத்திரத்தையும், ‘அமுதா’ கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். இரண்டு கதாபாத்திரங்களுமே மிக அழகாக எழுதப்பட்டிருந்ததால் அது எனக்கு மிகவும் கடினமான முடிவாக இருந்தது. ஆனால் படம் முடிந்து திரையில் பார்த்தபோது, ஒரு நடிகையாக இல்லாமல், ஒரு ரசிகையாக நான் அந்தப் படத்தை ரசித்தேன். இவ்வளவு அழகான, மனதை வருடும் ஒரு திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன் என்பதே எனக்கு மிகப்பெரிய திருப்தியாக இருந்தது. இந்த அருமையான படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆகாஷ் சார் தயாரிப்பாளராக இருந்தாலும், அவருடைய உண்மையான ஆர்வம் இயக்கத்தில்தான் இருக்கிறது என்பதை இந்தப் படம் முழுவதும் உணர முடிகிறது. கதையில் அவர் வைத்திருந்த சிறிய சிறிய விவரங்களே அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. முதல் படத்திலேயே இவ்வளவு அழகான படைப்பை கொடுத்ததற்கு அவருக்கு என் வாழ்த்துகள். இன்னும் பல சிறந்த படங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் சார் மற்றும் சாய் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பின் போது ஒரு நாள் மனோஜ் சாரிடம், ‘எப்படி சார் ஒவ்வொரு ஃபிரேமையும் ஓவியம் போல இவ்வளவு அழகாக உருவாக்குகிறீர்கள்?’ என்று கேட்டேன். ஒவ்வொரு காட்சியும் மிகவும் இயல்பாக இருந்தாலும், அதே நேரத்தில் கவிதை போலவும் இருந்தது. இந்தப் படத்தில் காட்சிகளின் மூலமே பல உணர்வுகளையும் கதையையும் அவர்கள் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். எங்களை அனைவரையும் திரையில் மிகவும் அழகாகக் காட்டியதற்கு நன்றி.

இந்தப் படத்தின் நண்பர்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் என் நன்றி. உங்களால் இந்தப் படப்பிடிப்பு ஒரு வேலை போல இல்லாமல், குடும்பமாக இருந்த அனுபவமாக மாறியது. ஏஞ்சலின், நீ மிகவும் இனிமையானவரும் திறமையானவரும். உன் வயதைக் காட்டிலும் மிகவும் முதிர்ச்சியாக சிந்திக்கிறாய். உன் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

டிராவிட், இந்தப் படத்தில் நடிகராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறாய். படப்பிடிப்பின்போதே நீ மிகவும் உயரம் செல்வாய் என்று எனக்குத் தெரிந்தது. உன்னுடைய எதிர்காலப் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ரக்ஷன், ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் போகப் போக என்னை மிகவும் அன்பாக உங்களுடைய குழுவில் ஒருவராக ஏற்றுக்கொண்டீர்கள். அதற்கு நன்றி.

சுதாகர், நீங்கள் மிகவும் திறமையான கலைஞர். உங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் பார்க்கும்போது மற்ற ரசிகர்களைப் போல நானும் உங்கள் கதாபாத்திரத்திற்குத்தான் அதிகமாக உற்சாகப்பட்டேன். இந்தப் படத்தில் உங்கள் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. நீங்கள் இன்னும் பெரிய உயரங்களை அடைவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்டி சார், குறைந்த திரை நேரத்திலேயே இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக நடித்திருக்கிறீர்கள். அந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.

கயாது, நீ மிகவும் அன்பானவரும் திறமையான நடிகையும்தான். ‘அமுதா’ கதாபாத்திரம் உனக்குக் கிடைத்தது மிகவும் சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். அதை மிக அழகாகச் செய்திருக்கிறாய். எப்போதும் என்னிடம் அன்பாக நடந்துகொண்டதற்கு நன்றி. வெளியில் பலர் எங்களை ஒப்பிட்டுப் பேசலாம். ஆனால் உண்மையில் நாங்கள் இருவரும் ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மனதார வாழ்த்துபவர்கள்தான். நீ இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.

அதர்வா… நான் சந்தித்த நடிகர்களில் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள். எப்போதும் மிகவும் பணிவாகவும், அனைவரையும் சமமாக மதித்து நடந்து கொண்டீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை ஒருபோதும் உணர்த்தாமல், ஒவ்வொருவரையும் மரியாதையுடன் நடத்தினீர்கள். குறிப்பாக படத்தின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம். அந்த நட்பு நீண்ட காலம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

தமன் சார் இசை இந்தப் படத்தின் ஆன்மா. எங்கள் படத்தின் முழு ஆல்பமும் தொடர்ந்து என் பிளேலிஸ்டில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பாடலும் படப்பிடிப்பு நாட்களை மீண்டும் நினைவூட்டுகிறது. இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்ததற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றி. ‘இதயம் முரளி’ எங்கள் அனைவரின் மனதிற்கும் மிகவும் நெருக்கமான திரைப்படம். இதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.”
(4/4)

நடிகர் அதர்வா முரளி பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளி வாழ்க்கை முடிந்து, கடைசி நாளில் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு ரீயூனியன் நிகழ்ச்சியில் நிற்பது போன்ற உணர்வுதான் இப்போது எனக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படக்குழுவுடன் ஒரு அழகான பயணத்தை பகிர்ந்திருக்கிறோம்.

‘இதயம் முரளி’ திரைப்படத்தின் பயணம் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை அப்போது முதன்முதலாக ஒரு இயக்குநராகவே சந்தித்தேன். அந்தச் சந்திப்பிலேயே இந்தப் படத்தின் தலைப்பு, தோற்றம், உணர்வு என அனைத்தையும் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். இன்று அந்தக் கனவை நாங்கள் நினைத்தபடியே திரையில் கொண்டு வந்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.

முதலில், இந்தப் படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவ…

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading