ட்ரோன் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் கருடா ஏரோஸ்பேஸ் -ன், புதிய பாதுகாப்பு ட்ரோன் வசதியை மாண்புமிகு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு.சஞ்சய் சேத்தி தொடங்கி வைத்து, வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவியருக்கு இலவச ட்ரோன் பயிற்சி திட்டங்களையும் அறிவித்தார்.*
சென்னை தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்பக் கல்லூரியில், கருடா ஏரோஸ்பேஸின் புதிய பாதுகாப்பு ட்ரோன் வசதியை மத்திய இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத்தி தொடங்கி வைத்தார். கருடா ஏரோஸ்பேஸ் தனது அக்ரி ட்ரோன் வசதியை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி சாதனை படைத்தது. அதன் மற்றொரு மைல்கல் சாதனை இந்த பாதுகாப்பு ட்ரோன் வசதி என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கும், ‘தற்சார்பு இந்தியா’ என்ற நாட்டின் உயரிய பயணத்தை இயக்குவதற்கும் கருடா…
